For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் தேவூ கார் நிறுவனத்துக்கு பிரச்சனை இல்லை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

கொரியாவின் தேவூ நிறுவனம் அந் நாட்டிடில் நஷ்டத்தில் மூழ்கிய நிறுவனமாக அறிவிக்கப்பட்டு நிலையில்இதனால் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என அதன் அதன் இந்தியக் கிளை அறிவித்துள்ளது.

தேவூ மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யோங் சாங் கிம் கூறுகையில், நிறுவனத்தின்இந்தியப் பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. கொரியாவிடமிருந்து நிதி பெற்றுத் தான் நிறுவனத்தை நடத்தவேண்டும் நிலை இல்லை.

எங்களிடம் போதிய நிதி வசதி உள்ளது. இந்தப் பிரச்சனை வரும் என்று தெரிந்து முன்னதாகவே நாங்கள் எங்களைதயார்படுத்திக் கொண்டோம். தேவையான பாகங்கள் வந்து சேருமாறு பார்த்துக் கொண்டுள்ளோம்.

கொரிய தொழிற்சாலையிலும் தொடர்ந்து கார் தயாரிப்பு நடக்கும். எங்களிடம் கார்களை வாங்கியவர்களுக்கும்வாங்கப் போகிறவர்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்றார்.

கொரியாவில் நஷ்டத்தில் மூழ்கிய நிறுவனமாக அறிவிக்கப்பட்டதால், தேவூ நிறுவனத்தில் பணி புரியும்ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதுகாப்பு இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கொரியாவில் மட்டும் இந்த நிறுவனத்துக்கு 5 தொழிற்சாலைகள் உள்ளன. இது தவிர 11 நாடுகளில் 12 கார்தயாரிப்பு தொழிற்சாலைகளும் உள்ளன. வெளிநாடுகளில் மட்டும் சுமார் 53,000 பேர் பணியாற்றுகின்றனர்.

இந்த நிறுவனம் இந்தியாவில் தேவூ மிட் சைஸ் கார்கள், மடிஸ் சிறிய ரக கார்களை தயாரித்து விற்று வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X