இனி, கிரிக்கெட்டில் சூதாட்டம் இருக்காது... உமாபாரதி
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உமாபாரதிபுதன்கிழமை தெரிவித்தார்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த சுக்தேவ்சிங் தின்ஷாவின் இலாகா மாற்றப்பட்டதைத்தொடர்ந்து, மத்திய விளாைட்டுத்துறை அமைச்சராக உமாபாரதி புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கிரிக்கெட் சூதாட்டம் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும்பரபரப்பாகப் பேசப்படும் இந்த சூதாட்டம் தொடர்பாக வேறு எதையும் நான் கூற விரும்பவில்லை.
தற்போதைய விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் நடத்தை விதிகள் பற்றி அமைச்சர் சுக்தேவ் சிங் தின்ஷாவைசந்தித்துப் பேச உள்ளேன். விளையாட்டுத்துறையைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தைநடத்தவுள்ளேன்.
கிராமப்புறத்திலுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு மேம்பாட்டுக் கொள்கைஉருவாக்கப்படும்.
சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறும் வகையில் வீரர்களின் திறமை வளர்க்கப்படும். அடுத்துவரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லும் என்றார் உமாபாரதி.