குருநானக்கின் 531 வது பிறந்தநாள்
ஹசனாத்தால்(பாகிஸ்தான்):
சீக்கிய மதத்தைப் பரப்பிய குருநானக்கின் 531 வது பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக 13 நாடுகளிலிருந்து 3,500 க்கும் மேற்பட்டோர் பாகிஸ்தானுக்கு வந்துள்ளனர்.
இவர்களில் 2000 பேர் இந்தியா, கனடா, ஆப்கானிஸ்தான், பிரிட்டன், அமெரிக்கா, தாய்லாந்து பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து பாகிஸ்தான் குருத்துவாரா கமிட்டி கூறிய விவரங்கள்:
குருநானக்கின் பிறந்தநாளயொட்டி இங்கு வந்திருக்கும் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து நான்கு நாட்கள் இங்கு தங்கி வழிபாடு நடத்துவார்கள்.பின்னர் அவர்கள் லாகூர் செல்வார்கள்.
இங்கு நடக்கும் நான்கு நாட்கள் பூஜையில் இரண்டாம் நாள் பக்தர்கள் அனைவரும் விரதம் கடைபிடிப்பார்கள். பின்னர் மூன்றாவது நாள் ஊர்வலமாகச்சென்று தங்களது விரதத்தை முடிப்பார்கள்.
குருநானக் பிறந்த இடமான ஹானாத்தால் பகுதியில் நவம்பர் 11 ம்தேதி சர்வதேச சீக்கியர்கள் மாநாடு நடத்த, சீக்கிய பக்தர்கள் திட்டமிட்டுள்ளனர்.இந்த மாநாட்டில் பாகிஸ்தான் அதிபர் ரபிக் தார்வார் கலந்து கொள்வார் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வருடம் இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து 10, 000 க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றுகுருத்துவாரா கமிட்டி தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.