முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கிறது ஹிஸ்புல்
இஸ்லாமாபாத்:
காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமானால் இந்தியா, பாகிஸ்தான், மற்றும் காஷ்மீர் உயர் அதிகாரிகள் சார்பில் முத்தரப்புப்பேச்சுவார்த்தை நடத்துவதுதான் சிறந்த வழி என்று ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாத அமைப்புத் தலைவர் சையத் சலாவுதீன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பின் தலைவர் சையத் சலாவூதீன் கூறியதாவது:
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நெடுங்காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கிறது காஷ்மீர் பிரச்சனை.
இதைத் தீர்க்க வேண்டுமானால் முத்தரப்புப் பேச்சு வார்த்தைதான் மாற்றுவழி. முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஒப்புதல் அளிக்கும் வரை நாங்கள்காஷ்மீரில் தீவிரவாதத்தைக் கைவிட மாட்டோம்.
சமீபத்தில் நாங்கள் போர்நிறுத்தம் செய்து, பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தோம். ஆனால் இந்தியா அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.அதனால் போர்நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது என்றார் சலாவூதின்.
யு.என்.ஐ.