நெடுமாறனுடன் ராமதாஸ்-ரஜினி சந்திப்பு
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர், தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனைச் சந்தித்து, அவர்மீண்டும் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து நெடுமாறன் காட்டுக்குச் செல்லலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்த விவரம் வருமாறு:
வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக, நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்,சுகுமாறன், பேராசிரியர் கல்யாணி ஆகியோர் தூதர்களாக காட்டுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தமிழக, கர்நாடக அரசுகள் செய்து வந்த நிலையில், தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடரில் சட்டசபைஎதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், நெடுமாறன் காட்டுக்குச் செல்லக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி நெடுமாறன் தேச விரோதி, பிரிவினைவாதி. அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்தப் பேச்சு தூதர்கள்குழுவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இதையடுத்து நெடுமாறன் காட்டுக்குச் செல்ல மாட்டேன் என்று அறிக்கை வெளியிட்டார். அவர் காட்டுக்குச் செல்ல வில்லையென்றால் நாங்களும்காட்டுக்குச் செல்ல முடியாது என்று பிற தூதர்கள் மூவரும் அறிவித்தனர்.
இதற்கிடையே, நெடுமாறனை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நடிகர் ரஜினிகாந்த், மற்றும் நடிகர் அம்பரீஷ்ஆகியோர் இறங்கியுள்ளனர்.
அவர்கள் மூவரும் வியாழக்கிழமை காலை நெடுமாறனைச் சந்தித்து அவர் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்துநெடுமாறன் காட்டுக்குச் செல்லலாம் என்று தெரிகிறது. கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினரும் அவசரமாக சென்னை சென்றுள்ளனர்.