எதிர்கட்சிகளை வெளிநடப்புச் செய்ய வைத்த வீரப்பன்
சென்னை:
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்றும் வீரப்பன் விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சபை கூடிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 100 நாட்களைத் தாண்டி விட்டதால் அந்தவிவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால் இதற்கு சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மறுப்புத் தெரிவிக்கவே, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இதையடுத்து வீரப்பன் விவகாரம் நவம்பர் 9 ம் தேதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சபாநாயகர் பழனிவேல்ராஜன் தெரிவித்தார்.
பின்னர் வியாழக்கிழமை சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. ஜீரோ நேரம் முடிந்ததும் பேசிய சபாநாயகர், மத்திய தொழில்துறை அமைச்சர்மாறனின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அவரைப் பார்ப்பதற்காக முதல்வர் கருணாநிதி புதன்கிழமை இரவு அப்பல்லோவுக்குச் சென்றார்.
அவர் இரவு முழுவதும் அப்பல்லோவிலேயே தங்கியிருந்தார். அதனால் முதல்வரால் வியாழக்கிழமை சட்டசபைக்கு வர இயலாது. இன்னும் 2 நாட்கள்முதல்வர் சட்டசபைக்கு வரமாட்டார்.
அதனால், ராஜ்குமார் விவகாரம் குறித்து நவம்பர் 12 ம் தேதிதான் விவாதிக்க முடியும் என்றார். இதையடுத்து வீரப்பன் விவகாரம்வியாழக்கிழமையும் சட்டசபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
யு.என்.ஐ.