For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க உதவிக்கரம் நீட்டுகிறது கட்டார்

By Staff
Google Oneindia Tamil News

டோகா (கட்டார்):

இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நெடுங்காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் காஷ்மீர் பிரச்சனையை விரைவில் தீர்த்து வைப்பதற்கு அனைத்துஉதவிகளையும் செய்ய கட்டார் ஒப்புக் கொண்டுள்ளது.

கட்டாரில் 9 வது இஸ்லாமிய நாடுகள் மாநாடு நடந்தது. இதில் பல்வேறு நாடுகள் பங்கு கொண்டன.

இதில் கலந்து கொண்ட கட்டார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் காமத் பின் ஜேசிம் கூறுகையில், இந்தியா, பாகிஸ்தான் அண்டை நாடுகளுக்கிடையேநெடுங்காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கிறது காஷ்மீர் பிரச்சனை.

காஷ்மீர் பிரச்சனையால் எல்லைப்பகுதியில் நாளுக்குநாள் பலர் பலியாகி வருகின்றனர். இதில் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி அப்பாவிப் பொதுமக்களும்உயிரிழக்கின்றனர்.

இந்தியா எங்களது நட்பு நாடு. இப்பிரச்சனையில் நாங்கள் எங்களாலான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம். ஏனெனில் இப்போதையசூழலில் காஷ்மீர் விரைவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையாகும் என்றார் ஷேக்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X