மதிமுக பொதுச் செயலாளராக வைகோ தேர்வு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளராக வைகோ ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் மதிமுக கட்சித் தேர்தல் கடந்த சில வாரங்களாகநடைபெற்று வந்தது.
வட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மேலமைப்பு பிரதிநிதிகள் போன்றோர் தேர்தல்நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இறுதி கட்டமாக பொதுச் செயலாளர் உள்பட மாநில நிர்வாகிகள் தேர்தல் வருகின்ற 16 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.
மதிமுக பொதுச்செயலர் பதவிக்கு வைகோ போட்டியிட சென்னை மாவட்ட செயலாளர்கள் தியாகராஜன், மனோகரன் உள்பட அனைத்து மாவட்டசெயலாளர்களும் 5000 ரூபாய் வேட்புமனு கட்டணம் செலுத்தினார்கள்.
வேட்புமனுவை கட்சித் தேர்தல் அதிகாரியிடம், வைகோ சென்னையில் உள்ள மதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல்செய்தார்.
வேறு யாரும் மனு கொடுக்காததால் மீண்டும் மதிமுக பொதுச்செயலாளராக வைகோ ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதே போல் மாநில பொறுப்புக்களுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்தவர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.