For Daily Alerts
Just In
திருச்சியில் தங்க வியாபாரி குடும்பத்தோடு தற்கொலை
திருச்சி:
வாங்கிய கடனை அடைக்க முடியாத காரணத்தால் தங்க வியாபாரியின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விஷம்குடித்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.
இத்தற்கொலைச் சம்பவம் திருச்சி மாவட்டம், ஜீவா நகரில் வெள்ளிக்கிழமை காலை நடந்தது.
இச்சம்பவத்தில் இறந்தவர்கள் பெயர் வெங்கடேசன் வயது 35. தங்க வியாபாரி. அவரது மனைவி சுஜாதா. வயது30. மகன் யோகேஷ் வயது 6. மூன்று பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, November 10, 2000, 5:30 [IST]