காஷ்மீரிகள் இந்தியாவின் அடிமைகள் அல்ல!
ஸ்ரீநகர்:
காஷ்மீர் குறித்த பேச்சுவார்த்தையில், பாகிஸ்தானையும் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சி மீண்டும்வலியுறுத்தியுள்ளது.
நேரத்தை வீணடிக்காமல், உடனடியாக பாகிஸ்தானையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தி, காஷ்மீர் பிரச்சினைக்ககு உடனடித்தீர்வு காண இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சி செயலாளர் ஷேக் நஸீர் கூறியுள்ளார்.
ஸ்ரீநகரில், அவர் கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் பேசுகையில், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் முக்கியமான ஒரு அங்கம்.பாகிஸ்தானையும் ஈடுபடுத்தாதவரை இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுவது சாத்தியமில்லாதது.
பாகிஸ்தானை தனது இளைய சகோதரனாக இந்தியா நினைக்க வேண்டும். அப்போதுதான் இரு நாடுகளுக்கிடையிலான நட்பும்பலப்படும்.
காஷ்மீரிகளை அடிமை போல இந்திய நடத்தக் கூடாது. காஷ்மீர் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை இந்தியா நிறைவேற்றவேண்டும். இந்தியாவின் கிரீடமாக வாழவே காஷ்மீரிகள் விரும்புகின்றனர். அடிமைகளாக அல்ல என்றார் அவர்.
யு.என்.ஐ.