For Daily Alerts
Just In
விருத்தாச்சலம் மாவட்டமாகுமா?
சென்னை:
கடலூரிலிருந்து விருத்தாசலத்தைப் பிரித்து தனி மாவட்டமாக்குவது குறித்து மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு முடிவுசெய்யப்படும் என்று மாநில வருவாய்த்துறை அமைச்சர் ரகுமான்கான் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, தமிழ சட்டசபையில், த.மா.கா., பா.ம.க., தி.மு.க. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்தபதிலில், கடலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதன் பின்னரே விருத்தாச்சலத்தை தனிமாவட்டமாக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
இதேபோல, சிதம்பரம், காட்டு மன்னார்குடியில் உள்ள திருமுட்டத்தை தனி ஊராட்சி ஒன்றியமாக்குவது குறித்தும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு பரிசீலனை செய்யப்படும் என்றார் அவர்.
Comments
Story first published: Sunday, November 12, 2000, 5:30 [IST]