For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காணாமல் போன விமானப் படை ஹெலிகாப்டரைத் தேடும் பணி தீவிரம்

By Staff
Google Oneindia Tamil News

பூஜ் (குஜராத்):

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில், காணாமல் போன இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எம்ஐ 8 ஹெலிகாப்டரைத் தேடும் முயற்சியில் ராணுவவீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் அந்த ஹெலிகாப்டரைக் காணவில்லை. இதுவரை ஹெலிகாப்டர் குறித்து எந்தத் தகவலும்இல்லை.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், போலீஸார் மற்றும் ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்திய - பாகிஸ்தான்எல்லைப் பகுதியில் தீவிர தேடுதல் பணி நடந்து வருகிறது. ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இருப்பினும்ஹெலிகாப்டர் பாகங்கள் ஏதும் கிடைக்காததால், அந்த சந்தேகமும் பலவீனமடைந்துள்ளது.

தலைநகர் காந்திநகரில் மத்திய இணை அமைச்சர் ஹரேன் பாண்டியா கூறுகையில், காணாமல் போன ஹெலிகாப்டர் குறித்து ராணுவ வீரர்கள் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இதுவரை எந்தவித துப்பும் கிடைக்கவில்லை என்றார்.

கடந்த வருடம் கார்கில் போர் நடந்து கொண்டிருந்த சமயம், கட்ச் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப் படை விமானம் ஒன்றை, இந்தியவிமானப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அதே பகுதியில்தான் தற்போது இந்திய ஹெலிகாப்டர் காணாமல் போயுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X