For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை ..காளிமுத்து

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து கூறினார்.

ஈரோடு வந்திருந்த அதிமுக அவைத்தலைவர் காளிமுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை விரைவுபடுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை. அதாவது புகைப்பட அடையாளஅட்டை வராமல், பழைய முறையிலேயே தேர்தலை நடத்தலாம் என்று ஆளும் கட்சி நினைக்கிறது.

தமிழகத்தில் கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக தனித்துத்தான் ஆட்சியமைக்கும். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சியை, புரட்சித்தலைவிஜெயலலிதா தலைமையில் அமைக்க ஒப்புக் கொள்ளும் கட்சிகள் எங்கள் கூட்டணியில் இடம் பெறும்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கும். எனவே கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா முடிவு செய்வார்.

தனிக்கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நிரந்தரமானதல்ல. அந்தத் தண்டனையால் அவர் தேர்தலில் போட்டியிட எந்தப் பாதிப்பும்வராது என்றார் காளிமுத்து.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X