ராமர் பிள்ளையின் சகோதரி காணவில்லை
சென்னை:
மூலிகைப் பெட்ரோல் "புகழ் ராமர் பிள்ளையின் சகோதரி அடையாளம் தெரியாத கும்பலால், சென்னையில் சனிக்கிழமை கடத்திச் செல்லப்பட்டதாகக்கூறப்படுகிறது.
மூலிகைப் பெட்ரோல் தயாரித்த ராமர்பிள்ளையின் சகோதரி தேவரதி. இவர் சென்னை பெசன்ட் நகரிலுள்ள நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் பணியாற்றிவருகிறார்.
சனிக்கிழமை பிற்பகல் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த போது, எதிர் திசையிலிருந்து வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரைக் கடத்திச்சென்றது.
ராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல் தயாரிப்பு முறை குறித்த ரகசிய பார்முலாவை கைப்பற்றும் திட்டத்துடனோ அல்லது அவரிடமிருந்து பணம் பறிக்கும்நோககத்திலோ இவர் கடத்தப் பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
ஏற்கனவே ராமர்பிள்ளை அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்பட்டார். பின்னர் அவராகத் திரும்பி வந்தார். இந்நிலையில் அவரது சகோதரிகடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.