அசாருதீன் மீது தாக்கரே குற்றச்சாட்டு
அமராவதி (மகாராஷ்டிரா):
முஸ்லீம் என்பதால் என்னைக் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு படுத்துகிறார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அசாருதீன்கூறியுள்ளதற்கு சிவசேனைக் கட்சித் தலைவர் பால் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் சிவசேனைக் கட்சியின் மாநாடு நடந்தது. மாநாட்டின் இறுதி நாள் விழாவில் கலந்து கொண்டு பால் தாக்கரேபேசியதாவது:
விளையாட்டின் பல்வேறு பிரிவுகளில், முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த வீரர்கள் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக விளையாடியுள்ளனர். அவர்களைநினைத்து சிவசேனா பெருமைப்படுகிறது.
நானோ, சிவசேனாவோ முஸ்லீம் மதத்தினரை எதிர்ப்பவர்கள் அல்ல. தேசியவாதியாகவும், நாட்டுப்பற்று உடையவராகவும் உள்ள அனைவரையும்நாங்கள் மதிப்போம்.
"இந்துயிசம் ஒரு மதம் அல்ல. அது தேசியவாதம். எனவே, இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் இந்துக்களே என்றார் பால்தாக்கரே.
யு.என்.ஐ.