வருமா ஜெருசேலம் சுவர்?
மாஸ்கோ:
பெர்லின் சுவர் போல ஜெருசேலத்தையும் இரண்டாகப் பிரித்து சுவர் அமைக்கலாம் என முன்னணி ரஷிய வெளியுறவுத் துறைநிபுணர் யோசனை தெரிவித்துள்ளார்.
பலவிதங்களிலும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஜெருசேலம் நகர் யாருக்கு என்பதில்தான் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும்இடையே சமீபத்தில் பிரச்சினை தீவிரமாகியுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை 190-க்கும்மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பாலஸ்தீனர்கள்.
இந்த நிலையில் இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சினை தொடர்பாக ரஷிய வெளியுறவுத் துறை நிபுணர் அலெக்ஸி போகாதுரோவ் புதியயோசனையைத் தெரிவித்துள்ளார். ரஷிய செய்தி நிறுவனமான நவோஸ்திக்கு அளித்த கட்டுரையில், அலெக்ஸிகூறியிருப்பதாவது:
இஸ்ரேல், பாலஸ்தீன மோதல் உடனடியாக தவிர்க்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், பெரும் போராக இது மாறக் கூடும்.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் சுவர் அமைத்து பிரச்சினைக்கு முடிவு கட்டியது போல, ஜெருசேலம் நகரையும் பிரித்து சுவர்அமைக்கலாம்.இதன் மூலம் பிரச்சினைக்கு முடிவு கட்டலாம். இந்த யோசனையை இரு தரப்பினரும் பரிசீலிக்க வேண்டும்.
பெர்லின் சுவர் தற்போது இடிக்கப்பட்டு விட்டாலும் கூட, கிழக்கு, மேற்கு ஜெர்மனிக்கு இடையே இருந்த பிரச்சினையைத் தீர்த்து,மேற்கு ஐரோப்பா முழுவதும் அமைதி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது என்று கூறியுள்ளார் அலெக்ஸி.
1967-ம் ஆண்டு நடந்த போரில் இஸ்ரேலிடம், ஜெருசேலத்தை இழந்தது பாலஸ்தீனம். தற்போது, ஜெருசேலத்தின் கிழக்குப்பகுதியை தனக்குத் தர வேண்டும் என்று பாலஸ்தீனம் கோரி வருகிறது. ஜெருசேலத்தையே தனது சுதந்திர பாலஸ்தீன நாட்டின்தலைநகராக்கவும் அது திட்டமிட்டுள்ளது. பிரச்சினையைத் தீர்க்க ஜெருசேலத்தை யாருக்கும் சொந்தமில்லாத, சுதந்திர நகராகஅறிவிக்கலாம் என்ற வாடிகன் சிட்டியின் யோசனையையும் அது நிராகரித்து விட்டது.
இதற்கிடையே, இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சர் இகர் இவனோவ் ஒரு வார காலபயணம் மேற்கொள்ளவுள்ளார். எகிப்து, ஈராக், செளதி அரேபியா, இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளுக்கு அவர் செல்லவுள்ளார்.திங்கள்கிழமை அவரது பயணம் துவங்குகிறது.
யு.என்.ஐ.