"அமெரிக்க ஆயுதங்களை பாக். குறைத்து விட்டது
டெல்லி:
1965-ம் ஆண்டு இந்தியாவுடன் நடந்த போருக்குப் பின் அமெரிக்க ஆயுதங்களைபயன்படுத்துவதை பாகிஸ்தான் குறைத்துக் கொண்டு விட்டதாக அந்நாட்டு முன்னாள்ராணுவ தளபதி ஜெனரல் அலி ஹமீத் கூறியுள்ளார்.
கராச்சியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியை நடத்தும்பொறுப்பை இவர் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்தக் கண்காட்சி குறித்து பி.பி.சி. உருதுப்பிரிவுக்கு அளித்த பேட்டியில் ஹமீத் கூறியுள்ளதாவது:
அமெரிக்க ஆயுதங்களின் பயன்பாட்டை பாகிஸ்தான் குறைத்துக் கொண்டு விட்டது.1965-ம் ஆண்டு இந்தியாவுடன் நடந்த போருக்குப் பின் அமெரிக்க ஆயுதங்களைக்குறைத்துக் கொண்டு சீன ஆயுதங்களை வாங்கத் துவங்கியது பாகிஸ்தான்.
கடந்த 25 ஆண்டுகளாக சீன ஆயுதங்களையே பெருமளவில் வாங்கி வருகிறதுபாகிஸ்தான். அமெரிக்க ஆயுதங்கள் என்று எடுத்துக் கொண்டால், சில டாங்குகளும்,எப்-16 விமானங்களும் மட்டுமே தற்போது பாகிஸ்தானிடம் உள்ளன.
1960-ம் ஆண்டுகளில் அமெரிக்காவிடம் வாங்கிய ஆயுதங்களில் பெருமளவிலானஆயுதங்களை பாகிஸ்தான் குறைத்துக் கொண்டு விட்டது.
1965-ம் ஆண்டு போருக்குப் பின் பாகிஸ்தானுக்கான தனது ஆயுத சப்ளையை அமெரிக்காநிறுத்தி வைத்தது. இதையடுத்து சீனாவிடம் ஆயுதங்களை வாங்கத் துவங்கியதுபாகிஸ்தான். 1970-ம் ஆண்டு முதல் சீனாதான், பாகிஸ்தானுக்கு அதிக ஆயுதங்கள் தரும்நாடாக உள்ளது.
ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்குபாகிஸ்தானின் ஆயுதங்களை விற்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய கராச்சியில்நடைபெறும் கண்காட்சி உதவும்.
ஆயுத தயாரிப்பில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் கூட்டு திட்டங்களை பாகிஸ்தான்வரவேற்கிறது என்றார் ஹமீத்.
முன்னதாக நான்கு நாட்கள் நடைபெறும் "ஐடியாஸ்-2000 என்ற இந்தக் கண்காட்சியைபாகிஸ்தான் அதிபர் ரபீக் தரார் செவ்வாய்க்கிழமை துவக்கி வைத்தார்.
யு.என்.ஐ.