For Daily Alerts
Just In
பாக். கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்காது
டெல்லி:
பாகிஸ்தானில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் இந்தியா கலந்து கொள்ளாது என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உமா பாரதி, செவ்வாய்க்கிழமை பிரதமர் வாஜ்பாயை சந்தித்துபேச்சுவார்த்தை நடத்திய பின் இந்த ரத்து அறிவிப்பு வெளியானது.
இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடனான தொடரில் பங்கேற்கிறதா, இல்லையா என்பதை புதன்கிழமைக்குள்கூறுமாறும், அது தெரிந்தால், மாற்று நடவடிக்கையில் ஈடுபட சரியாக இருக்கும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட்வாரியம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இதுகுறித்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெயவந்த் லெலே கூறுகையில் மத்திய அரசிடமிருந்துஎங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என்றார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, November 15, 2000, 5:30 [IST]