For Daily Alerts
Just In
வதந்தி பரப்பும் ராமதாஸ் .. கூறுகிறார் திருமாவளவன்
பெரம்பலூர்:
அதிமுகவுக்கும், பாமகவுக்கும் கூட்டணி ஏற்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாஸ் வதந்தி பரப்புவதாக தலித் பேந்தர் அமைப்பின் தலைவர்திருமாவளவன் கூறியுள்ளார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பா.ம.கவுடன் மீண்டும் சேரும்தவறை ஜெயலலிதா செய்ய மாட்டார் என்று ராமதாஸுக்கே தெரியும். இருந்தும்,இதுபோன்ற வதந்திகளை அவர் தொடர்ந்து பரப்பி வருகிறார்.
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட மாட்டோம்.அதேபோல, பா.ம.க. இடம் பெற்றுள்ள கூட்டணியிலும் இடம் பெற மாட்டோம்என்றார் அவர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, November 15, 2000, 5:30 [IST]