For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீநகரில் ராணுவ அதிகாரி உள்பட 4 ராணுவத்தினர் சுட்டுக்கொலை

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே பட்டான் நகரில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவஅதிகாரி மற்றும் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

பட்டான் நகர் அருகே ஆராம் மொஹல்லா பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே புதன்கிழமை மாலை துப்பாக்கிச் சண்டைநடந்தது. தீவிரவாதிகள் கைத்துப்பாக்கிகள் மற்றும் கிரானைடு குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினார்கள்.

இச்சம்பவத்தில் எதிர்தாக்குதல் நடத்திய 6 ராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை மிகவும்கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் சம்பவத்தால் பல வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. தீயணைப்புப் படை வீரர்கள்சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஸ்ரீநகர்- யூரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் போக வேண்டியஇடங்களுக்குச் செல்ல முடியாமல் அங்கேயே நின்று கொண்டிருக்கின்றன.

பல்வாமா என்ற பகுதியில் உள்ள மார்க்கெட் ஒன்றில் தீவிரவாதிகள், எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது நடத்திய தாக்குதலில் 2 எல்லைப்பாதுகாப்புப் படையினர் உள்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X