For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழக வாகனங்களுக்கு பெங்களூரில் தீ வைப்பு
பெங்களூர்:
தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு பெங்களூரில் ராஜ்குமார் ரசிகர்கள் தீவைத்தனர். பலர் ரகளையில் ஈடுபட்டனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் அவனதுபிடியிலிருந்து மீட்கப்பட்டு வியாழக்கிழமை பெங்களூர் வந்து சேர்நதார். அவரைவரவேற்க அவரது வீட்டு வாசலில் ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர்.
ரசிகர் கூட்டம் நேரமாக ஆக அதிகரித்துக் கொண்டே வந்தது. போலீசாரும் மிகக்குறைந்த அளவிலேயே இருந்தனர்.
ராஜ்குமார் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் அங்குநிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக பதிவு எண் கொண்ட இரண்டு மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைத்தனர். பல வீடுகள் மீது கல்வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
Comments
Story first published: Friday, November 17, 2000, 5:30 [IST]