மல்லேஸ்வரிக்கு பதக்கம் தருகிறது த.மா.கா.
சென்னை:
த.மா.கா. சார்பில் ஒலிம்பிக் வீராங்கனை மல்லேஸ்வரிக்கு தங்கப் பதக்கம்வழங்கப்படுகிறது.
த.மா.கா. மகளிர் பிரிவு தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன்வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இந்திரா காந்தி 20-ம் நூற்றாண்டின் தலை சிறந்த பெண்மணி என்று பி.பி.சி. நிறுவனம்தேர்வு செய்துள்ளதை பாராட்டியும், இந்திரா பிறந்த நாழ் விழாவையும் இணைத்துத.மா.கா. மகளிர் பிரிவு சார்பில் 19-ம் தேதி மாலை 4 மணி அளவில் சென்னைசத்தியமூர்த்தி பவனில் கோலாகல விழா நடைபெறுகிறது.
விழாவை மூப்பனார் துவக்கி வைக்கிறார். முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் சிறப்புவிருந்தினராக கலந்து கொள்கிறார். விஞர் வாலி, இயக்குனர் விசு, பாத்திமா மூசாபர்ஆகியோர் பேசுகின்றனர்.
ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தகர்ணம் மல்லேஸ்வரி இவ் விழாவில் கவுரவிக்கப்படுகிறார்.
அவருக்கு த.மா.கா. சார்பில் தங்கப் பதக்கம் அளிக்கப்படுகிறது என்று அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.