நான் என்ன சொல்ல ... கோபால்
ஈரோடு:
ராஜ்குமார் விடுதலை குறித்து தூதுக் குழுத் தலைவர் பழ. நெடுமாறன் கருத்துத்தெரிவிப்பார். தனிப்பட்ட முறையில் நான் எதுவும் சொல்ல இயலாது என்று அரசுத்தூதர் நக்கீரன் கோபால் தெரிவித்தார்.
கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்டு 108 நாட்கள வன வாசத்திற்குப்பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
ராஜ்குமார் கடத்தப்பட்டவுடன் அனைவரது கவனத்திற்கும் வந்தவர் நக்கீரன் கோபால்.காரணம் அதற்கு முன் நடந்த பல "கடத்தல் நாடகங்களை சுபமாக முடித்து வைத்தவர்என்பதால்.
இந்த முறையும் அவர்தான் காட்டுக்குத் தூதராக கிளம்பிப் போனார். ஆனால்போனார், போனார் ஐந்து முறை போனார். ஒவ்வொரு முறையும் ஏதாவது கேசட்அல்லது கோரிக்கையுடன் தான் திரும்பி வந்தார்.
5-வது முறை அவர் காட்டுக்குப் போனபோது, கூடவே தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, புதுவை சுகுமாறன் ஆகியோரும்புதிய தூதர்களாக சென்றனர்.
ஐந்து முறை சென்ற கோபாலால் சாதிக்க முடியாததை, தனது சமயோஜிதத்தால் 2-வதுமுறையே சாதித்து விட்டார் பழ.நெடுமாறன்.
நெடுமாறன் குழுவினரும் தூதர்களாகப் போகின்றனர் என்ற செய்தி வந்ததும்,கோபாலுக்கும், அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள்வந்தன.
கோபால்தான் அரசுத் தூதர் என்பதை வலியுறுத்தி, கோபால் தரப்பில் அறிக்கை கூடவந்தது. ஆனால் "ஹீரோவை மீட்கும் முயற்சியின் "கிளைமாக்ஸில் கதை மாறியது.கோபால் காட்டிற்குள் அழைக்கப்படவே இல்லை. நெடுமாறன் தலைமையிலானகுழுதான் நடிகர் ராஜ்குமாரை மீட்டு அழைத்து வந்து பத்திரமாக சேர்த்தது.
இந்த நிலையில் நெடுமாறனை தூதுக் குழுத் தலைவராக கோபால் ஏற்றுக்கொண்டுள்ளார். ராஜ்குமார் விடுதலை குறித்து கோபாலிடம் கருத்து கேட்டபோது,நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தனிப்பட்ட முறையில் நான் பேச முடியாது. தூதுக்குழுவின் தலைவர் நெடுமாறன். அவர்தான் இதுகுறித்துக் கருத்துக் கூற முடியும் என்றுகூறிவிட்டு நிறுத்திக் கொண்டார்.
இந்த சுப முடிவு குறித்து நெடுமாறன் கருத்துத் தெரிவிக்கையில், எங்களது மனிதநேயப்பணி சுபமாக முடிந்துள்ளது. எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்ப பத்திரமாக,சரியாக முடித்து விட்டோம்.
வீரப்பனுடன் பேசியது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியிடம்தெரிவிக்கவுள்ளோம். அதன் பிறகே செய்தியாளர்களுக்கு விளக்கப்படும். எங்களதுமனிதநேயப் பணி தொடரும் என்றார்.