For Daily Alerts
Just In
லாரி, வேன் மோதல் .. 5 பேர் பலி
பல்லடம்:
கோவை மாவட்டம் பல்லடம் அருகே டாடா சுமோ மற்றும் லாரி மோதிக் கொண்டதில் 5 பேர் இறந்தனர்.
கோவை மாவட்டம், பல்லடம் அருகே நள்ளிரவில் லாரி மற்றும் டாடா சுமோ வேன் மோதிக் கொண்டன.
மதுரையிலிருந்து ஒரு லாரி கோவைக்கு வந்து கொண்டிருந்தது. இந்த லாரி பல்லடம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது கோவையிலிருந்து ஒரு டாடா சுமோ வேன் திருப்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இரண்டு பெண் குழந்தைகள்உட்பட 5 பேர் இறந்தனர். டாடா சுமோவில் இவர்கள் பயணம் செய்தனர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 4பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments
Story first published: Friday, November 17, 2000, 5:30 [IST]