அமைதியில் அதிரடிப்படை
சேலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்டபிறகும் சிறப்பு அதிரடிப் படைக்கு எந்த உத்தரவும் வராதததால் அவர்கள் முகாம்களில்காத்திருக்கிறார்கள்.
சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க தமிழக, கர்நாடக அரசுகள் சிறப்பு அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்தியூர், திம்பம், பண்ணாரி ஆகிய பகுதிகளில் இந்தஅதிரடிப்படை முகாம்கள் உள்ளன. அதிரடிப்படை வீரர்கள் வீரப்பனைப் பிடிக்க பலஆண்டுகளாக போராடி வருகின்றனர்.ஆனால் அவர்களால் இது வரை வீரப்பனைபிடிக்க முடியவில்லை.
இந் நிலையில் கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி ராஜ்குமார் சந்தனக் கடத்தல்வீரப்பனால் கடத்தப்பட்டார். அவரை மீட்க அரசு தூதராக நக்கீரன் கோபால் சென்றபோது அதிரடிப்படை முற்றிலுமாக வாபஸ் பெறப்பட்டது.
ஆனால் ஒவ்வொரு முறை கோபால் காட்டுக்குச் செல்லும் போதும் அதிரடிப் படைதயார் படுத்தப்படும். நக்கீரன் கோபால் ராஜ்குமாரை மீட்டு வந்தவுடன் காட்டிற்குள்சென்று வீரப்பனை பிடிக்கலாம் என திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஒவ்வொருமுறையும் கோபால் வெறும் கையுடன்தான் திரும்பி வந்தார்.
நெடுமாறன் முதல் முறை சென்று ராஜ்குமாரின் மருமகனை மீட்டு வந்தார். அதனால்இரண்டாவது முறை நெடுமாறன் காட்டுக்குள் சென்ற போது அதிரடிப்படை தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் ராஜ்குமார் விடுதலை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.அவரது விடுதலை, சில முகாம்களுக்கு மட்டுமே உடனடியாகத் தெரிய வந்தது. சிலமுகாம்களுக்கு மாலை 4 மணிக்குத்தான் தகவல் கிடைத்துள்ளது.
ராஜ்குமார் விடுதலை செய்யப்படட் பிறகும் அதிரடிப்படை எப்போது காட்டுக்குள்செல்ல வேண்டும் என்பது குறித்து எந்த விதமான உத்தரவும் வரவில்லை. எனவேஅதிரடிப்படை வீரர்கள் அந்த முகாம்களில் இன்னும் காத்திருக்கிறார்கள்.