மீன் சாப்பிட்டு பல் போச்சு .. விமான நிறுவனம் மீது வழக்கு
கோலாலம்பூர்:
மலேசியாவிலிருந்து, சிட்னிக்கு விமானத்தில் சென்ற போது விமானத்தில் பரிமாறப்பட்ட மீனில் இருந்த முள் சிக்கிபல் சேதமடைந்ததாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது மலேசியாவைச் சேர்ந்த இந்திய டாக்டர் வழக்குத்தொடர்ந்துள்ளார்.
மலேசியாவைச் சேர்ந்தவர் டாக்டர் ஜக்தேவ் சிங் உஜாகர் சிங். இவர் தனது விடுமுறையை ஆஸ்திரேலியாதலைநகர் சிட்னிக்குச் சென்று கழிக்க நினைத்தார். அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 6 ம் தேதி, சிங்கப்பூர்ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோலாலம்பூரிலிருந்து, சிட்னிக்குச் சென்றார். விமானத்தில் மீன் உணவுபரிமாறப்பட்டது. அதில் இருந்த மீனில் முள் நீக்கப்படவில்லை. உணவைச் சாப்பிட்ட டாக்டர் ஜக்தேவுக்கு பல்சேதமடைந்தது.
இதையடுத்து, சிட்னி நகரில் அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார். மலேசியா திரும்பி மேலும் 9 முறை சிகிச்சைசெய்து கொண்டார். தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்கில், சிங்கப்பூர்ஏர்லைன்ஸ் விமானத்தில் பரிமாறப்பட்ட மீனில் முள் நீக்கப்பட்டு விட்டதா என்று உறுதி செய்து கொள்ளாமலேயேஅவர்கள் பரிமாறி விட்டார்கள். இது அவர்களின் கவனக்குறைவு.
எல் பல்லின் ஈறு காயமடைந்ததால், மிகவும் வலியில் துடித்தேன். என்னால் விடுமுறையை சிட்னியில்விரும்பியபடி கழிக்க முடியவில்லை. இதற்காக அதிகப் பணம் செலவழித்து மருத்துவம் செய்து கொண்டேன்.
இதற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 1,713.3 டாலர்கள் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு, நீதிமன்றத்தில் அடுத்த வருடம் விசாரணைக்கு வரவுள்ளது.
யு.என்.ஐ.