For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சியில் 1000 கம்யூ. தொண்டர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சி நகரில் மத்திய அரசு அலுவலங்கள் முன் மறியல் நடத்திய ஆயிரக்கணக்கானமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களும், சி.ஐ.டி.யூ. தொண்டர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சி.ஐ.டி.யூ சார்பில் மண்ணெண்ணெய். சமையல்எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்தும், தனியார் மயமாக்கலைஎதிர்த்தும் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக் கோட்டையில் உள்ளபல்வேறு மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்படஆயிரக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும், சி.ஐ.டி.யூதொண்டர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையத்தின் முன் மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ. மாநிலதுணை பொதுச் செயலாளர் சிங்காரவேலு உட்பட 700 தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X