For Daily Alerts
Just In
சரிவிலிருந்து மீண்டது ஜிம்பாப்வே
டெல்லி:
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளைஇழந்து 232 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய, ஜிம்பாப்வே அணிகளுககு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லாமைதானத்தில், சனிக்கிழமை துவங்கியது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங்கை செய்தது. துவக்கத்தில் மடமடவென விக்கெட்டுகள் விழுந்தாலும்கூட ஆலிஸ்டர் கேம்பலும், கர்லிஸ்லியும் நின்று ஆடி அணியின் சரிவை மீட்டனர்.
கேம்பல் 70 ரன்களும், கர்லிஸ்லி 58 ரன்களும் எடுத்தனர். ஆண்டி பிளவர்ஸ் 55 ரன்கள் எடுத்தார். கேம்பலும்,கர்லிஸ்லியும் இணைந்து 120 ரன்களைச் சேர்த்தனர்.
ஆட்டநேர இறுதியில் 232 ரன்களை ஜிம்பாப்வே சேர்த்திருந்தது. ஸ்ரீநாத்திற்கு 3 விக்கெட்டுகளும், ஜோஷி,டெண்டுல்கருக்கு தலா ஒரு விக்கெட்டும் கிடைத்தன.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, November 18, 2000, 5:30 [IST]