வேலூர் வருகிறார் ஜனாதிபதி
வேலூர்:
வரும் 28 ம் தேதி ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் வேலூர் வருகிறார்.
வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி கட்டப்பட்டுள்ள மகப்பேறு மருத்துவமனைக்கான புதிய கட்டிடத் திறப்பு விழாவரும் 28 ம் தேதி நடைபெறுகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்ள, ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் வேலூர் வருகிறார். அன்று காலை 9.20 மணிக்கு கொச்சியில் இருந்து விமானம்மூலம் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்குச் செல்கிறார்.
அங்கிருந்து ராணுவ ஹெலிக்காப்டர் மூலம் 10.55 மணிக்கு வேலூர் அப்துல்லாபுரம் விமான நிலையத்துக்கு வருகிறார்.
பின்னர் பிற்பகல் 11 மணிக்குப் புறப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வருகிறார்.
பகல் 11.15 மணிக்கு புதிய கட்டிடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தைத் திறந்து வைக்கிறார்.
மாலை 4 மணிக்கு அவர் அப்துல்லாபுரம் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் ரேணிகுண்டா சென்று அங்கிருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லிசெல்கிறார்.