For Daily Alerts
Just In
காஷ்மீரில் 2 சகோதரர்களின் தலை துண்டிப்பு
பாரமுல்லா:
ஜம்மு காஷ்மீர் மாவட்டம் குப்வாரா மாவட்டத்தில், இரண்டு சகோதரர்கள்கடத்தப்பட்டு, பின்னர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. முஷ்டாக் அலி அகமதுவானி மற்றும் நஸீர் அகமது வானி ஆகியோரே கொல்லப்பட்டவர்கள். இவர்கள்இருவரும் கேய்கம்-காண்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இவர்களை அடையாளம் தெரியாத ஒரு கும்பல் கடத்திச் சென்றது. அதற்குப் பிறகுஅவர்கள் குறித்த தகவல் இல்லை. இந்த நிலையில், வயல் வெளியில் இருவரது தலைதுண்டிக்கப்பட்ட உடல்களும் கிடந்தன.
இவர்களது சகோதரர், குலாம் ஹூசைன் இந்த ஆண்டு மே மாதம்தான்தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். இவர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, November 20, 2000, 5:30 [IST]