நெய்வேலியில் ரூ. 1200 கோடியில் சுரங்கம் தோண்டும் பணி
கோவை:
நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகம், ரூ 1200 கோடி செலவில் சுரங்கம் தோண்டும் பணியைத் விரைவில் தொடங்கத் திட்டமிட்டுள்ளது என்று மத்தியநிலக்கரித்துறை அமைச்சர் சண்முகம் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகம் கடந்த 1989 ம் ஆண்டு சுரங்கம்தோண்டுவதற்கான நிலம் கையகப்படுத்துதலுக்காக ரூ 50 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால் அப்போது போதிய அளவு நிதி இல்லாததால்அத்திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது நிலக்கரிக் கழகத்தில் நிதிநிலை சீரடைந்து வருவதால் மீண்டும் சுரங்கும் தோண்டும் பணியை முடுக்கி விடலாம் என்று நிலக்கரிக் கழகம்திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் ஒரு வருடத்தில் தொடங்கும்.
ஏற்கனவே நெய்வேலி நிலக்கரிக் கழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட நீர் பிரிவு இயங்கி வருகிறது. இதுதவிர இங்குள்ள மின்நிலையத்தின் உதவியுடன் சிமென்ட்தொழிற்சாலை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த சிமென்ட் தொழிற்சாலை விரைவில் அமைக்கப்படும் என்றார் சண்முகம்.
கோவையில் நடக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தொகுதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் சண்முகம் கோவை வந்துள்ளார்.
யு.என்.ஐ.