For Daily Alerts
Just In
தீவிரவாதிகளை அடக்க மத்திய அரசை நாடுகிறது மேற்கு வங்கம்
ஜல்பைகுரி (மேற்கு வங்கம்):
மேற்கு வங்க மாநிலத்தின் வட பகுதிகளில் அதிகரித்து வரும் ஊடுறுவலைத் தடுக்கமத்திய அரசு, கூடுதல் புற ராணுவ வீரர்களை அனுப்ப வேண்டும் என்று அம்மாநிலபோலீஸ் டி.ஜி.பி. தீபக் சன்யால் கூறியுள்ளார்.
ஜல்பைகுரியில் தீவிரவாதிகள் ஊடுறுவல் குறித்து ஆராய வந்த அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில், வடக்கு வங்கத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம்அதிகரித்து வருகிறது. இவர்களை ஒடுக்க கூடுதல் புற ராணுவப் பிரிவை மத்திய அரசுஅனுப்ப வேண்டும்.
தீவிரவாதிகளை அடக்க மேற்கு வங்க அரசு உறுதி பூண்டுள்ளது. முழு பலத்தையும்இதற்காகப் பயன்படுத்த அரசு தயாராக உள்ளது என்றார் அவர்.
யு.என்.ஐ.
Story first published: Tuesday, November 21, 2000, 5:30 [IST]