For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிரடிப்படை நடவடிக்கை: நெடுமாறன் வருத்தம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சந்தன வீரப்பனையும், அவரோடு காட்டில் உள்ள தமிழ்த் தீவிரவாதிகளையும் வேட்டையாட அதிரடிப்படை நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டிருப்பதுவருத்தமளிக்கிறது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் கூறியுள்ளார்.

காட்டுக்கு தூது சென்று வீரப்பனிடம் இருந்து ராஜ்குமாரை மீட்டு வந்த குழுவின் தலைவரும், தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவருமான நெடுமாறன்இதுகுறித்துக் கூறுகையில், இருமாநிலங்களிலும் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல்களால் இப்படிப்பட்ட ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைக் கமிஷன் உத்தரவின் அடிப்படையில், அதிரடிப்படையினரால் ஆதிவாசிகளுக்கு ஏற்பட்ட கொடுமைகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ளசதாசிவம் கமிஷன், தனது விசாரணையை மீண்டும் துவக்க உள்ள நிலையில், அதே அதிரடிப்படையை மீண்டும் காட்டுக்கு அனுப்புவது வருத்தமளிக்கிறது என்றுகூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X