For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு பஸ் ஊழியர்களுக்கு பென்ஷன்: தமிழகம் அறிமுகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள போக்குவரத்துத் தொழிலாளர்கள் பென்ஷன்திட்டத்தை டிசம்பர் 17ம் தேதி முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார்.

இத்தகவலை சென்னையில் வெள்ளிக் கிழமை செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் புதியதிட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாடிசம்பர் 17ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும்.

தமிழக முதல்வர் கருணாநிதி 21 தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிறதிட்டத்தை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 21 அரசு போக்குவரத்துக் கழகங்கள்உள்ளன. ஒரு கழகத்திற்கு ஒருவர் என்ற வீதத்தில் 21 பேருக்கு முதல்வர் தனதுகரங்களால் ஓய்வூதியம் வழங்குவார்.

இந்த திட்டம் 1.9.1998 முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும். அந்த தேதியில்இருந்து இன்று வரை 4 ஆயிரம் தொழிலாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்கள்அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்கும். அரசு ஊழியர் ஓய்வூதியத் திட்டம் போன்றேஇதுவும் நடைமுறைப்படுத்தப்படும்.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒன்றே கால் லட்சம்தொழிலாளர்களுக்கும் பயனளிக்கக் கூடியது இந்த திட்டம்.

இதேபோல் ஆட்டோ ஓட்டுனர்கள், தையல் கலைஞர்கள், முடி திருத்துவோர், சலவைத்தொழிலாளர்கள், பனைமரத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள்ஆகியோர்களுக்கென 7 வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புது வாரியங்கள்டிசம்பர் 16ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்றார் பொன்முடி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X