"இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுறுவலை பாக். அனுமதிக்காது
டெல்லி:
ரம்ஜானை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில், இந்தியா சண்டை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் எல்லைக் கட்டுப்பாட்டைத் தாண்டி, தீவிரவாதிகள் செல்வதைபாகிஸ்தான் ஒரு போதும் அனுமதிக்காது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி:
1999-ம் ஆண்டு, ஜூலை 4 ம் தேதி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் தீவிரவாதிகள் யாரும்நடமாடாதபடி தடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபடும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். அதற்கு முன் அவர் வாஷிங்டனில் அமெரிக்கஜனாதிபதி பில் கிளின்டனுடன் இதுகுறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வாஷிங்டன் ஒப்பந்தப்படி, எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அனுமதியில்லாமல் ஊடுருவும் தீவிரவாதிகளைப் பாகிஸ்தான் ஊக்குவிக்கக் கூடாது. இந்தஒப்பந்தத்தை, பாகிஸ்தான் எப்போதும் மதித்து நடக்கும். ஒருபோதும் இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறாது. இந்த விஷயத்தில் இந்தியாவும் அதிக அளவுஆதரவு தருகிறது என்பதை மறுக்க முடியாது.
நவாஷ் ஷெரீபால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தம், கடந்த வருடம் கார்கிலில் ஏற்பட்ட போருடன் முடிவடைந்தது. இது குறித்து ராணுவ ஆட்சியாளர்முஷாரப் வேறு எதுவும் உறுதியாகக் கூறவில்லை.
1999 ம் வருடம் பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தானிலுள்ள லாகூருக்குச் சென்றார். அப்போது பிரதமர் வாஜ்பாய்க்கும், நவாஸ்ஷெரீபுக்கும் இடையே லாகூர் ஒப்பந்தம் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் அந்த ஒப்பந்தத்தையும் நிராகரித்து விட்டது.
ஆனால், தற்போது மத்திய அரசு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், எல்லைக் கட்டுப் பாட்டுப் பகுதியில் தீவிரவாதிகளை பாகிஸ்தான்ஒருபோதும் அனுமதிக்காது.
பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி, இந்திய எல்லைக்குள் நுழைந்து குற்றங்களிலோ அல்லது தீவிரவாதசெயல்களில் ஈடுபடவோ முனைந்தால் அவர்களைத் தண்டிப்பதில் தவறில்லை.
எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் 50,000 ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது. இந்தியா 7, 00, 000 ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது. அதிகமான அளவுராணுவ வீரர்களை நிறுத்தியுள்ள இந்தியாவால் நிச்சயமாக தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுத்து நிறுத்த முடியும்.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டத்தைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றார் சத்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.