For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போதும், மாமிச உணவு

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

அமெரிக்கா, இங்கிலாந்தில் மாட்டு இறைச்சி உண்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வரும் நிலையில், இந்தியாவில்மாட்டிறைச்சி உண்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விலங்குகளை மதிக்கும் மனிதர்கள் என்ற அமைப்பு இந்தியாவில் மிருகங்கைள வதை செய்வதை எதிர்த்து இயக்கம்ஆரம்பித்துள்ளது. இந்த அமைப்பின் இந்தியப் பிரதிநிதி ஜேசன் பேக்கர் கூறுகையில், இந்தியாவில் ஆடு, மாடு, கோழி, பசுக்கள்,எருமைகள் ஆகியவை துன்புறுத்தப்படுகின்றன. அவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும்போதுகொஞ்சம் கூட ஈவு இரக்கம் காட்டுவதில்லை.

அதே போல அவை கொல்லப்படுவதும் கூட கர்ண கொடூரமான முறையில் தான் நடக்கிறது. இந்தியா தனது பாரம்பரியஉணவான சைவத்துக்கு மாற வேண்டும். பிரிட்டனில் இறைச்சி உண்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அங்கு 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 50 சதவீதம் பேர் சைவத்துக்கு மாறிவிட்டனர். பிரிட்டனில் சைவ உணவுவிடுதிகளுக்கு தனி மவுசே வந்துவிட்டது. அதே போல அமெரிக்காவில் ரெட் புட் டெய்லி, நியூஸ்ரூம் கபே ஆகிய சைவ உணவுவிடுதிகளில் தான் லாஸ்ஏன்ஜெல்சின் ஹாலிவுட் நடிகை, நடிகையர்கள் குவிகின்றனர்.

ஏன் இந்தியாவில் கூட நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஹேமமாலினி, பண்டிட் ரவி சங்கர், கிரிக்கெட் வீரர் அமில் கும்ப்ளே,மாடல்ஜான் ஆப்ரஹாம், நடிகை ஜூகி சாவ்லா, மகிமா செளத்ரி ஆகியோரும் சைவம் உண்பவர்கள் தான்.

உடல் நலனில் அக்கரை இருப்பவர்கள் மாமிசம் உண்பதை உடனே நிறுத்த வேண்டும்.

மனிதாபிமான அடிப்படையில் மட்டுமல்லாமல், உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு மாமிசம் உண்பதை நிறுத்த வேண்டும்.கொழுப்புச் சத்து நிறைந்த இறைச்சியால் தான் மாரடைப்பு, இருதய பாதிப்புகள், கேன்சர் ஆகியவை ஏற்படுகின்றன என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X