"தீவிரவாதியாகி விட்டார் நெடுமாறன்
சென்னை:
தேசியவாதியாக இருந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தீவிரவாதியாக மாறி விட்டார் என்று திராவிட தெலுங்கர் முன்னேற்றக்கழகத் தலைவர் காமாட்சி நாயுடு ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
சென்னையில், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணை தென் மாவட்டங்களின் உயிர்நாடிப் பிரச்னையாகும். இப்பிரச்சனையில்மக்களுக்காக போராட வேண்டிய மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி மோகன் மெளனம் சாதிக்கிறார். கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் தலைவர்களும்மெளனம் சாதிக்கின்றனர்.
மாநிலத்திற்கு ஒரு கொள்கை, ஒரு நீதி என்று வேஷம் போடும் கம்யூனிஸ்ட்களுக்கு மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள். இப்பிரச்சனை தொடர்பாகபேசுவதற்கு தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். மாநிலம் தழுவிய பந்த் நடத்துவதென கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும்.
தேசியவாதியாக இருந்த நெடுமாறன் தீவிரவாதியாக மாறியுள்ளார். அதிரடிப்படைக்கே சவால் விடும் அளவிற்கு அவர் வளர்ந்திருக்கிறார். அவரைதமிழக அரசு கைது செய்யாததற்கான காரணத்தை விளக்க வேண்டும்.
வீரப்பனிடம் நெடுமாறன் ஏதோ ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளார். இரண்டு மாநில அரசுகளும் அதனை மறைக்கின்றனர். அவர்களுக்குள் உள்ளஒப்பந்தம் என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
தற்பொழுதுள்ள நவீன யுகத்தில் வீரப்பனைப் பிடிப்பது பெரிய காரியம் அல்ல. செயற்கைக்கோள், ராடார் என அதிநவீன கருவிகள் நமது ராணுவத்திடம்உள்ளது. அதை வைத்து வீரப்பனைப் பிடிக்க முடியும்.
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து சென்னை நகரில் போஸ்டர்கள் ஒட்டுகிறார்கள். தடை செய்யப்பட்ட இயக்கத்தைஆதரிப்பவர்களை தமிழக அரசு ஏன் கைது செய்யவில்லை என்பதை விளக்க வேண்டும்.
தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறது. தவறில்லாமல் தெளிவாகவாக்காளர் அடையாள அட்டை வழங்கும் வரை தேர்தல் தேதியை அறிவிக்கக் கூடாது. இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம்என்று தெரிவித்தார் அவர்.