For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமர் பிள்ளை மீது குற்றச்சாட்டு பதிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மூலிகைப் பெட்ரோல் ராமர் பிள்ளை மீது திங்கள்கிழமை கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

ஜனவரி மாதம் 17 ம் தேதி இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை தொடங்குகிறது. ரசாயனப் பொருட்கள் மூலம் கலப்படப் பெட்ரோல் தயாரித்துவிற்று ரூ 2.27 கோடி மோசடி செய்ததாக அவர் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராமர்பிள்ளையின் வளர்ப்பு தாயார் வேணுதேவி, வங்கி அதிகாரி பரத், தொழில் அதிபர் ராஜசேகர், சின்னசாமி ஆகியோர் மீதும் இவ்வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.

திங்கள்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. ராமர் பிள்ளை உள்பட குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் விசாரணைக்கு வந்தனர். அவர்கள் அனைவர்மீதும் கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று ராமர்பிள்ளை மறுத்தார். பின்னர் மாஜிஸ்ட்ரேட் கிருஷ்ணமூர்த்தி வழக்கின்அடுத்த கட்ட விசாரணையை 17 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X