கடனை அடைத்தது ஏபிசில் நிறுவனம்
மும்பை:
அமிதாப்பச்சன் நிறுவனம் கனரா வங்கியிடமிருந்து வாங்கிய கடன் பிரச்சனையை நீதிமன்ற தலையீடு இல்லாமல்தீர்த்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது.
பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சானால் நடத்தப்பட்டு வரும் நிறுவனம் அமிதாப்பச்சன் கார்ப்பரேஷன் லிமிலெட்(ஏபிசிஎல்).
இந்த நிறுவனம் கனரா வங்கியிடமிருந்து ரூ 10 கோடி கடனாக பெற்றிருந்தது. மூன்று வருடங்களாகியும் இந்தநிறுவனம் பணத்தை திருப்பி தராததால் கனரா வங்கி நீதிமன்றம் மூலமாக பணத்தை திரும்பப் பெறும் முயற்சியில்ஈடுபட்டது.
அமிதாப்பச்சனின் வழக்கறிஞர் அமிதாப்பச்சன் மொத்த கடன் தொகையையும் மூன்று தவணைகளாக செப்டம்பர்மாதம் செலுத்தி முடித்து விட்டதாக கூறியதைத் தொடர்ந்து கனரா வங்கி தான் தொடர்ந்திருந்த வழக்கை வாபஸ்பெற்றுக் கொண்டது.
எந்த நிறுவனமாவது நஷ்டத்தில் நடத்தப்பட்டால் நலிந்த நிறுவனங்களுக்கான தொழில் மற்றும் நிதி மேம்பாட்டுநிறுவனத்திடம் (பிஐஎஃப்ஆர்) முறையீடு செய்தால் அவர்கள் அந்த நிறுவனத்திற்கு நிதி உதவி செய்வார்கள்.
அல்லது அந்த நிறுவனம் நலிந்த நிறுவனம் அந்த நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்கள் அவர்களிடம் திரும்பகேட்கக் கூடாது என அறிவித்து விடுவர்.
ஏபிசில் இது போல் பிஎஃஐஆரிடம் முறை யிட்டிருந்ததால் அந்த நிறுவனம் நலிந்த நிறுவனமாகஅறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து கடன் கொடுத்தவர்கள் தொழில் மற்றும் நிதி மேம்பாட்டு ஆணையத்தின் மேல் முறையீட்டுகழகத்தில் (ஏஏஐஎஃஆர்) முறையீடு செய்யலாம். அதன் படி கனரா வங்கி முறையீடு செய்தது.
தற்போது ஏபிசில் கடனை திரும்ப செலுத்தி விட்டதால் பிஐஎஃப்ஆர் ஏபிசிஎல் நலிந்த நிறுவனம் இல்லை எனஅறிவித்துள்ளது. கனரா வங்கியும் ஏஏஐஎஃப்ஆரில் செய்திருந்த முறையீட்டை வாபஸ் பெற்றுக் கொண்டது.