கூட்டுறவு சட்ட மாற்ற அறிக்கை முதல்வரிடம் ஒப்படைப்பு
சென்னை:
கூட்டுறவு சட்டம் மற்றும் விதிகளில் மாற்றம் செய்வது குறித்து அமைக்கப்பட்ட பரிந்துறை குழு அறிக்கை முத்லவரிடம் சமர்பிக்கப்பட்டது.
தமிழக கூட்டுறவு சட்டம், விதிகளில் மாற்றம் செய்யப்படுவது குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவினரின் அறிக்கை தமிழக முதல்வர்கருணாநிதியிடம் சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
தமிழக கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 1983 மற்றும் கூட்டுறவு சங்கங்கன் விதிகள் 1988 ஆகியவற்றில் தேவையான மாற்றங்கள் குறித்து பரிந்துரைசெய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த பரிந்துரை குழு தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் தண்டாயுதபாணி எம்.எல்.ஏ. தலைமையில் கடந்த ஜூன் மாதம் 21 -ம்தேதி அமைக்கப்பட்டது. இந்த குழுவில் 13 பேர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த குழு சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பரிந்துரை அறிக்கையை அளித்தது. உணவுத்துறை அமைசச்ர் நேரு முன்னிலையில்அறிக்கை முதல்வரிடம் கொடுக்கப்பட்டது.