மின்வாரியம் தனியார்மயமாகாது
சென்னை:
மின்சார வாரியம் தனியார் மயமாகாது என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
மின் வாரியத்தை சேர்ந்த ஒரு சில தொழிற்சங்கங்கள் டிசம்பர் மாதம் 12 ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த அறிவிப்பை விடுத்துள்ளன.
இந்தத் தொழிற்சங்கங்கள், அரசு மின்வாரியத்தை தனியார் மயமாக்கப் போவதாகவும், அதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாகவும்அறிவித்துள்ளன.
தமிழக மின்வாரியம் தனியார் மயமாக்கும் உத்தேசம் தமிழக அரசுக்கு இல்லை. அது இப்போது செயல்படுவது போலவே தொடர்ந்து செயல்படும்.
தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் இந்த சங்கங்களின் தவறான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்.
இதனால் உண்மை நிலையைக் கருத்தில் கொண்டு மின்வாரிய ஊழியர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என்று அமைச்சர் ஆற்காடுவீராசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.