For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

களைகட்டியது வேடந்தாங்கல் சீஸன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரியில் வழக்கத்தை விட இந்த ஆண்டுஅதிகமான தண்ணீர் நிரம்பியுள்ளதால் சீசன் முன் கூட்டியே துவங்கி விட்டது. இதனால்வண்ணப் பறவைகளின் வருகை நாள் தோறும் அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு அருகில் உள்ள புகழ்பெற்ற வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து பல வகையான வண்ணப் பறவைகள் சீசனின்பொழுது வருகின்றன.

பல மாதங்கள் வேடந்தாங்கல் ஏரியில் தங்கும் பறவைகள் முட்டையிட்டு குஞ்சுபொறிக்கும். குஞ்சுகள் வளர்ந்து சிறகுகள் முளைக்கும் போது சீசனும் முடிவடையும்.பின்னர் குஞ்சுகளோடு, புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் சென்று விடும்.

பரந்து விரிந்த வேடந்தாங்கல் ஏரியில் தற்பொழுது கடந்த ஆண்டை விட அதிகமானதண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் பல நாடுகளைச் சேர்ந்த வண்ணப்பறவைகளின்வருகை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் டிசம்பர் மாதத்தில்துவங்க வேண்டிய சீசன் நவம்பர் மாதத்திலேயே துவங்கி விட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X