பேச்சு வார்த்தையைப் பொறுத்துத்தான் நிரந்தர போர்நிறுத்தம்: பாக்.
இஸ்லாமாபாத்:
எதிர்காலத்தில் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினால் அதில் கிடைக்கும் தீர்வைப்பொறுத்துத்தான் நிரந்தரப் போர்நிறுத்தம் கடைபிடிக்கப்படுமா என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று பாகிஸ்தான் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சத்தார் இதுகுறித்து கூறியதாவது:
ரம்ஜானை முன்னிட்டு காஷ்மீரில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது இந்தியா. காஷ்மீரில் நிரந்தரப் போர்நிறுத்தம் செய்ய வேண்டுமானால் அதற்குபேச்சுவார்த்தை மூலம் நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும்.
காஷ்மீர் பிரச்சனை குறித்தான பேச்சுவார்த்தை எதிர்காலத்தில் நடக்கலாம். அந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிய வேண்டும். நாங்கள்போர்நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கிறோம்.
ஆனால் காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். காஷ்மீரில் வாழும் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் தீர்வு காணப்பட வேண்டும்.வன்முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றார் சத்தார்.