கண்ணன் குற்றச்சாட்டு குறித்து மூப்பனார் கேள்வி
சென்னை:
புதுவை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரை அறிமுகம் செய்து, அமைச்சர் பதவி பெற்றுத் தந்தது ஏன் என்று அமைச்சர்கண்ணனுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாண்டிச்சேரி த.மா.கா. தலைவர் பதவியை சில மாதம் முன்பு அமைச்சர் கண்னன் ராஜினாமா செய்தார்.இதையடுத்து புதுவை த.மா.கா. இரண்டாக பிளவுபட்டது. கண்ணன் ஆதரவாளர்கள் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ்என புது கட்சியை தொடங்கினர்.
இதன் பின் கண்ணன் அணியினரும், தேனீ ஜெயக்குமார் அணியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திவந்தனர்.
இப்போது புதுவை த.மா.கா. அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாககண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்கள் கேள்விக்குப பதிலளித்த த.மா.கா. தலைவர் மூப்பனார்,தேனீ ஜெயக்குமாரை அறிமுகப்படுத்தி அவருக்கு எம்.எல்.ஏ. பதவியும் அமைச்சர் பதவியும் வாங்கித் தந்தவரேகண்ணன் தான். இப்போது அவர் மீது குற்றம் சாட்டுவது ஏன் என பதில் கேள்வி எழுப்பினார்.