சிமென்ட் விலையைக் குறைக்க தமாகா கோரிக்கை
சென்னை:
சிமென்ட் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
மழைக்காலத்தில் சிமென்டின் விலை மிக குறைவாக இருக்க வேண்டும் என்ற நடைமுறை வியாபார விதி முறைக்குமாறாக இந்த வருடம் சிமென்ட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிமென்டின் விலை ஏற்றத்தால் கட்டடத் தொழில் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும்தமிழகத்தில் சிமென்ட் ஆலை முதலாளிகளால் கடைபிடிக்கப்பட்ட இந்த வியாபார அநியாயம் இந்த ஆண்டுஇந்தியா முழுமைக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
ஏக போக வியாபார நடைமுறை தடைச் சட்டத்தின் கீழும் அத்தியாவசியப் பண்டங்களின் சட்டத்தின் மூலமும் இந்தஅநியாய விலை ஏற்றத்தைத் தடுக்க முடியும்.
கொரியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து சிமென்டை இறக்குமதி செய்து பொதுவிநியோக மையங்கள்மூலம் ஒரு மூடை சிமென்ட்டை ரூ 100 க்கு விற்கலாம். அதனால் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு ஒரு மூடைசிமென்டுக்கு ரூ 10 லாபம் கிடைக்கும் என்றார் பீட்டர் அல்போன்ஸ்.