இனி, அமைச்சர்களை நீங்கள் கேள்வி கேட்கலாம்...
சென்னை:
சென்னைத் தொலைக் காட்சியில் தொலைபேசி மூலம் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதில்அளிக்கவுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,
சென்னைத் தொலைக் காட்சி மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகள் தொடர்பாகக் கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டதுறைகளின் அமைச்சர்கள் பதில் அளிப்பர். இந்த நிகழ்ச்சி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலை 3 மணி முதல் 4 மணிவரை ஒளிபரப்பாகும்.
சென்னைத் தொலைக்காட்சியின் முதல் சேனலிலும், பொதிகை சேனலிலும் இந்த நிகழ்ச்சி ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகும்.
இந் நிகழ்ச்சியில் கேள்விகள் கேட்க பொதுமக்கள் 5390100 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
முதல் வாரமான இன்று பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை அமைச்சர் துரைமுருகன் பொதுமக்கள் கேள்விகளுக்கு பதில்அளிக்கிறார்.
17ம் தேதி வருவாய்த்துறை அமைச்சர் ரகுமான் கானும், 24ம் தேதி சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜனும், 31ம் தேதி பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பெரியசாமியும் பொதுமக்கள் தொலைபேசி மூலம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றனர்.