For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கராத்தே ஹூசைனிக்கு இது தேவையா?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கராத்தே வீரர் ஹூசைனி வரைந்த நிர்வாண ஒவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிரபல கராத்தே வீரர் சீகான் உசைனி சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச கராத்தே போட்டிக்காக சில இளைஞர்களை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அந்த இளைஞர்கள் போலி பாஸ்போர்ட்கள் வைத்திருந்ததாக டெல்லி போலீஸார் உசைனியை கைது செய்தனர்.

பிறகு அவர் டெல்லி திஹார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அப்பொழுது ஜெயிலுக்குள் கண்ட காட்சிகள், முக்கிய குற்றவாளிகள் எல்லோரையும்ஒவியமாக வரைந்தார்.

விடுதலையான பிறகு அவர் அந்த ஒவியங்களை வைத்து சென்னையில் ஓவியக் கண்காட்சி நடத்தினார். வருகின்ற 18-ம் தேதி லலித் அகாடமியில் அத்தகையஓவிய கண்காட்சி ஒன்றை மீண்டும் நடத்த அவர் திட்டமிட்டிருந்தார்.

இதற்காக அடையார் பகுதியில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த நோட்டீஸ்கள் முன் அனுமதி பெறாமல் தனியார் கட்டிட சுவர்களில்ஓட்டப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இது பற்றி போலீஸில் புகார் செய்யப்பட்டது.

புகாரின் பேரில் போலீஸார் பெசன்ட் நகர் கலாசேத்திரா காலனியில் உள்ள சீகான் உசைனியின் அலுவலகத்தில் சோதனை நடத்தினார்கள்.

அப்பொழுது ஓவிய கண்காட்சியில் வைக்க ஏராளமான நிர்வாண ஓவியங்கள் வரைந்து வைத்திருந்தது தெரிந்தது.

நூற்றி ஐம்பது நிர்வாண ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஐந்நூறுக்கும் மேற்பட்ட போஸ்ட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக உசைனி அலுவலகத்தில் பணிபுரியும் செந்தில், தாஜூதீன், பகதூர், வெங்கடேசன், கணேஷ்குமார் ஆகிய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். பிறகுஞாயிற்றுக்கிழமை இரவே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X