For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வருகிறது வனக் காவல் படை

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

அஸ்ஸாம் ரைபிள் படையைப் போன்றே உள்ளூர் இளைஞர்களைக் கொண்டு புதிய படை ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்தப் படையைக் கொண்டு காடுகளில் பதுங்கும் தீவிரவாதக் கும்பலை எளிதாக அடையாளம் கண்டு பிடிக்க முடியும்.

அசாம் ரைபிள் படை:

அஸ்ஸாம் ரைபிள் படை, காட்டுப் பகுதிகளில் வாழும் இளைஞர்களைக் கொண்டு உருவாக்காப்பட்டது. இவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி உள்படஅனைத்து பல பயிற்சிகளை அரசு அளித்துள்ளது.

புதிய ரைபிள் படை:

இதே போன்று சத்தியமங்கலம், நீலகிரி வனப்பகுதி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள இளைஞர்களைத் திரட்டி, அவர்களுக்குச் சிறப்பு பயிற்சி அளிக்க அரசுமுடிவு செய்துள்ளது. இதன் முதற் கட்டமாக 500 இளைஞர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இந்த இளைஞர்கள் ஏற்கனவே காடுகளில் வசித்து வருவதால், வன விலங்குகளிடமிருந்து தங்களை எளிதில் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மேலும், இந்த இளைஞர்களுக்கு உணவுப் பிரச்னையும் எழாது. மேலும், மலைப் பகுதியில் நிலவும் காலச் சூழ்நிலை இவர்களுக்கு அத்துப் படியாகஇருக்கும். இத்தகைய படையை விரைவில உருவாக்கி அவர்களுக்கு 3 மாத காலப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சி காலத்தின்போது இளைஞர்கள் துப்பாக்கி சுடுதல், நவீன ஆயுதங்களைக் கையாளும் முறை ஆகியவை குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். மேலும்,காடுகளுக்குள் புதிதாக ஊடுறுவும் நபர்களை எளிதில் அடையாளம் கண்டு, அவர்களை பிடித்து விசாரணை நடத்தவும் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

தொடர் தாக்குதலில் படாமல், அவ்வப்போது திடீர் தாக்குதல்களில் ஈடுபடும் வீரப்பன் போன்றவர்களுடன் போராட இவர்களே சிறந்த முறையில்பணியாற்ற முடியும். மேலும், இந்த இளைஞர்களைப் பிடிக்க அரசு எடுக்கும் திடீர் முயற்சிகளால் வீண் செலவுகள் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X