கள்ளக் காதலனுக்காக வளர்ப்புத் தந்தையைக் கொன்ற மகள்
கோவை:
வளர்ப்புத் தந்தையைக் கொலை செய்த மகளுக்கும், அவளது கள்ளக் காதலனுக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
மேலும் "ஆள் மாறட்டம் செய்த குற்றத்திற்காக மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் இவர்களுக்கு விதிக்கப்பட்டது.
கோவை சாயிபாபா காலனியில் ஒரு அடுக்குமாடி வீட்டில் குடியிருந்தவர் ராணி (30). இவருக்கும் சென்னையச் சேர்ந்ததொழிலதிபர் சுப்ரமணியத்திற்கும் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பையடுத்து ராணிக்கு இந்த அடுக்குமாடி வீட்டைவாடகைக்கு பிடித்துக் கொடுத்தார் சுப்பிரமணி.
ராணியுடன் அவரது வளர்ப்புத் தந்தை பழனிச்சாமி (60) என்பவர் வசித்து வந்தார்.
இந் நிலையில் ராணிக்கும், கார் டிரைவர் பார்த்தசாரதிக்கும் தொடர்பு ஏற்பட்டது. பழனிச்சாமி இது குறித்து ராணியைக்கண்டித்துள்ளார். ஆனால், ராணி, பார்த்தசாரதியுடன் தொடர்பை விடவில்லை. இதையடுத்து பழனிச்சாமியை கொலை செய்துசெப்டிக் டேங்க்கில் போட்டு விட்டனர்.
செப்டிக் டேங்கில் கிடந்த பிணம் குறித்து அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது ராணியும்,பார்த்தசாரதியும் அவரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது ராணி, தனது தந்தையை கொலை செய்யவில்லை என்றும், தனது தந்தைஉயிருடன் உள்ளார் என வெள்ளையன் என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார். இதையடுத்து இந்த வழக்கில் திருப்பம்ஏற்பட்டது.
பின்னர், கொலையுண்டவர் வளர்ப்புத் தந்தை பழனிச்சாமி என்பதை அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டது.
இறுதியாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தணிகாசலம், இந்த வழக்கில் ராணிக்கும், பார்த்தசாரதிக்கும் ஆயுள் தண்டனைவிதித்து தீர்ப்பளித்தார். மேலும் ஆள் மாறட்டம் செய்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.