For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காட்டுப்பகுதியை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்த்தார் டிஜிபி

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

தமிழக டிஜிபி ராஜகோபாலன் பண்ணாரி , சத்தியமங்கலம், காட்டுப் பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் கோவை வந்த அவர், வீரப்பன் வேட்டையில் அடுத்த நடவடிக்கை குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மத்திய அரசின் உதவியாக மணிப்பூரிலிருந்து கோவை வந்து சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படையினர் செவ்வாய்க்கிழமை பண்ணாரி முகாமிற்குப் புறப்பட்டுச்சென்றனர். இவர்களை வழி நடத்திச் செல்ல வந்த கமாண்டோ ஜார்ஜ் சாக்கோ, எல்லைப் பாதுகாப்பு படையினர் ஐ.ஜி., விஜயகுமார், டி. ஐ.ஜி., பீட்டர்,ஆகியோர் கோவையில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் பண்ணாரி, சத்திக் காடுகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்ட தமிழக டி.ஜி.பி ராஜகோபால், தனியார் விருந்தினர் மாளிகை ஒன்றில் தங்கினார்.

இந்த மாளிகையில் அதிரடிப்படை மற்றும் எல்லைப் பாதுகாப் பாதுகாப்பு படையின் வீரர்களிடம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போதுவீரப்பனைப் பிடிக்க இது வ ர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர்.

மேலும், எல்லைப் பாதுகாப்பு படையின், அடுத்த கட்ட நடவடிக்கைகள், இருதரப்பு ஒத்துழைப்புகள், கூட்டுச் செயல் திட்டம் ஆகியவை பற்றிபேச்சுவார்த்தை நடத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X